தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label இராஜரெத்தினம். Show all posts
Showing posts with label இராஜரெத்தினம். Show all posts

Tuesday, January 01, 2019

கால்களாக நாங்கள் இருப்போம்

--------------------------- நம்பிக்கை இழக்கவில்லை
_________________
சகோதரி சுமதி

நெஞ்சம்
பொறுக்கவில்லை

கண்ணீர்
நிற்கவில்லை

இறைவா
ஏன்
இந்த
சோதனை

காலம்
எல்லாம்
மறக்க
முடியா
வேதனை

நல்லவர்
மனம்
வாடலாமா ?

நிம்மதியை
உன்
காலடியில்
தேடலாமா ?

கலக்கம்
வேண்டாம்
சகோதரி

கால்களாய்
நாங்கள்
இருப்போம்

காலம்
எல்லாம்
கூடவே
இருப்போம்

தவிக்கிறது
எம்
நெஞ்சம்

கண்ணீருக்கு
தான்
பஞ்சம்
_____________________
ப.இராஜரெத்தினம்
_____________________

Monday, December 31, 2018

ஆசிரியர் நண்பர்கள்

வானிலை அறிக்கை தருவதில் முன்னோடி வானிலை ஆய்வாளர் திரு ந.செல்வகுமார் ஆசிரியர்  அவர்கள் " உயிர் காத்த உத்தமன் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய நிகழ்வு. இருவரும்  ஆசிரியர்கள்  என்பதில் பெருமிதம் கொள்வோம்.

Sunday, December 30, 2018

உயிர் காத்த உத்தமன்

______________________
உயிர்
       காத்த
            உத்தமன்
______________________
ப.இராஜரெத்தினம்
       9047187029
       6379037057
______________________

நீ
செல்வகுமார்
இல்லை
எங்கள்
செல்லகுமார்

இரக்க
குணம்
நிரம்பிய
நல்லகுமார்

நீ
குடிசையில்
உதித்த
இரமணன்

தகவலை
அள்ளி
கொடுப்பதில்
நீ
குமணன்

தகட்டூர்
பிறந்த
நவீன
அதியமான்

கடும்
சொல்
மனதில்
தாங்காத
கவரிமான்

வென்று
காட்டியது
உன்
கணிப்பு

கஜாவுக்கு
கூட
உன்
மேல்
கொஞ்சம்
கசப்பு

தலையில்
அடித்து
சத்தியம்
செய்தாய்
நீ

பாமர
மக்களுக்கு
பாதுகாப்பு
வைத்தியம்
செய்தாய்
நீ

எந்த
சலனமும்
இல்லை
எங்களிடம்

நீ
தானே
கவனம்
ஊட்டினாய்
மக்களிடம்

பதறினாய்
துடித்தாய்
பரிதவித்தாய்
கேட்டோமா
நாங்கள்

கஜா
கலங்கடித்து
கடந்து
போனது
ஒரு
திங்கள்

கஜா
காட்டியது
போக்கு

கணித்து
சொன்னது
உன்
நாக்கு

கல்லில்
எழுத்து
உன்
வாக்கு

குறை
சொல்பவரை
உன்
மனதில்
இருந்து
நீக்கு

ஊடகம்
கூட
சொல்லவில்லை
உண்மையை

நீ
தானே
தோல்
உரித்து
காட்டினாய்
புயலின்
தன்மையை

நீ
நகரத்தில்
பிறந்து
இருந்தால்
உன்னை
போற்றி
விளம்பர
தட்டி
வைத்திருப்பார்

பாவம்
பட்டி
காட்டில்
பிறந்து
விட்டாய்
அதனால்
தான்
வாய்க்கு
வந்தபடி
திட்டி
வைக்கிறார்

தனக்கே
தெரியாமல்
தன்
தலையை
குட்டி
சுவற்றில்
முட்டி
வைக்கிறார்

உடைய
போவது
அவர்களின்
தலை

நீ
மனதில்
கொள்ளாதே
கவலை

உன்
புகழ்
உலகம்
முழுதும்
பரவி
நிற்கிறது

மக்கள்
மனம்
எல்லாம்
உன்
பெயரே
விரவி
நிற்கிறது

நீ
செல்வகுமார்
இல்லை
மக்களின்
செல்லகுமார்
__________________
89.சர்வகட்டளை
வேதாரண்யம்
     614810
__________________

Friday, December 28, 2018

கலைமாமணியும் ஆசிரியரும்

கலைமாமணி புஷ்பவனம் டாக்டர் ஐயா அவர்கள் " ஏழைகளின் ஏந்தல் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இராஜரெத்தினம் ஆசிரியர் அவர்கள்
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  பணியாற்றிய ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இது ஆசிரியர் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.

Friday, December 14, 2018

ஏழைகளின் ஏந்தல் புஷ்பவனம் குப்புசாமி

______________________
  ஏழைகளின் ஏந்தல்
       புஷ்பவனம்
         குப்புசாமி
______________________
ப.இராஜரெத்தினம்
------------------------------------
நீ
மட்டும்
கதறவில்லை
என்றால்
எங்கள்
குரல்
உலகுக்கு
எட்டி
இருக்காது

உன்
உடல்
மட்டும்
பதறவில்லை
என்றால்
எங்கள்
கண்ணீர்
இன்னும்
வற்றி
இருக்காது

கடை
கோடிக்கும்
கருணை
காட்டிய
கலைஞனே

எங்கள்
துயரை
தூர
விரட்டிய
கவிஞனே

திக்கற்ற
மக்களின்
கண்
காணா
உருவமே

அன்னை
தெரசாவின்
இன்னொரு
வடிவமே

பிறந்த
இடம்
மறக்காத
அருமை
புதல்வனே

கதறும்
இதயங்களில்
இன்று
நீ
முதல்வனே

அப்போது
உன்
குரலில்
தேன்
இருக்கும்
ரசித்திருக்கிறோம்

இப்போது
ஊன்
உருக்கும்
வலி
இருந்ததே
விழித்து
நிற்கிறோம்

அழுதாலும்
ஏழை
சொல்
அம்பலத்தில்
ஏறாது

எட்டாத
உயரம்
சென்றாலும்
உன்
அன்பு
மாறாது

நீ
உண்ணவில்லை
நீ
உறங்கவில்லை

பால்ய
காலத்தை
மறக்கவில்லை

வறுமை
நிலையை
மறைக்கவில்லை

யார்
யாருக்கோ
கொடி
பிடித்தோம்

யார்
யாருக்கோ
வெடி
வெடித்தோம்

கஜா
தந்தது
பெரிய
அடி

எம்
வாழ்வில்
விழுந்தது
பெரிய
இடி

நீ
தானே
தந்தாய்
தாய்
மடி

குரலற்ற
மக்களின்
அன்பை
ஒன்றாய்
சேர்த்து
மடியில்
பிடி

தென்னையில்
விழுந்த
எங்கள்
மூச்சை
சென்னையில்
மீட்டவரே

மாளாத
துயருக்கு
மருந்து
போட்டவரே

உன்னை
பிள்ளையாய்
பெற
என்ன
தவம்
செய்தாளோ
உன்
தாய்

உன்னை
என்றும்
மறக்க
மாட்டோம்
நாங்கள்
நன்றி
மறவா
சேய்

மறைக்காட்டு
மண்ணுக்கு
நீ
ஒரு
உதாரணம்

உன்னால்
தானே
கிடைத்தது
ஏகப்பட்ட
நிவாரணம்

வள்ளல்
இதயங்களுக்கும்
கருணை
உள்ளங்களுக்கும்
சேர்ந்து
கட்டுவோம்
நன்றி
என்னும்
தோரணம்

தேசிய
கீதம்
கூட
மறந்து
போனது

உன்
இதய
கீதமே
கிராமத்தின்
தேசிய
கீதம்
ஆனது

பட்டிக்காட்டுக்கு
யார்
கொடுப்பார்
குரல்

எம்
விழி
நீர்
துடைத்தது
உன்
விரல்

இதயம்
மயக்கும்
கிராமத்து
கீதமே

எங்கள்
உயிரில்
கலந்து
விட்ட
ஐந்தாம்
வேதமே

நீ
மண்ணை
முட்டி
முளைத்திட்ட
விதை

உனக்கு
தானே
தெரியும்
கிராமத்தின்
கதை

ஊரோடு
பின்னி
பிணைந்தது
உன்
சதை

உன்
மனம்
பொறுக்குமா
அவர்கள்
படும்
வதை

ஒவ்வொரு
நிமிடமும்
உனக்கு
பரபரப்பு

உன்னை
பாடகனாய்
பெற்றது
எங்கள்
வாழ்வின்
சிறப்பு

தடுக்கி
விழுந்த
எமக்கு
கை
கொடுத்தாய்

இதயம்
பட்ட
ரணத்தை
பாட்டால்
துடைத்து
எடுத்தாய்

குருதி
எல்லாம்
ஒன்றாய்
சேர்த்து
கண்ணீராய்
வடித்தாய்

அன்பையும்
பாசத்தையும்
எந்த
கிராமத்து
பள்ளியில்
நீ
படித்தாய் ?
_____________________
ப.இராஜரெத்தினம்
   89. சர்வகட்டளை
    வேதாரண்யம்
         614810
_____________________

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture