ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோயில்களில் ஆடி மாத வழிபாடுகள் நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். எனவே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தடை விதித்துள்ளனர். மேலும் சென்னையில் முக்கிய வீதிகளில் செயல்படும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
WhatsApp மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் – புதிய வசதி அறிமுகம்!
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்று கிழமை கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7வது தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும் அம்மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் நோய் பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3fMlJJr
via IFTTT
No comments:
Post a Comment