மாலை 6 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தினசரி மாலை 6 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி அதிகபட்சம் 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இதனை தடுக்கும் நோக்கில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தினார். இதில் 14 நாட்கள் எவ்வித தளர்வுகளும் இன்றி கடும் ஊரடங்கு அமலானது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி நடைபெற்றது. தமிழக அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்து உள்ளது.
தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி விவரங்கள் சேகரிப்பு – விரைவில் அறிவிப்பு!
தற்போது 2வது அலை இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், சில மாவட்டங்களில் தொற்று சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு, வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதன் பின்னர் தற்போது சேலம் மாவட்டத்திலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவாக்ஸின் & கோவிஷீல்ட் கலந்து செலுத்தும் தடுப்பூசி பலன் அளிக்குமா? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
அதன்படி ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணிவரை செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையில் செயல்பட அனுமதி கிடையாது. பூ, பழம், காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படலாம். அதுமட்டுமின்றி வாரச் சந்தைகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post மாலை 6 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3lHHpdr
via IFTTT

No comments:
Post a Comment