தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை மேலும் 2 வாரம் நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. இந்த ஊரடங்கு நீட்டிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் 3வது அலை கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
10வது முடித்தவரா?? – ஜே.கே.பென்னர் நிறுவன வேலைவாய்ப்பு 2021
மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் நடத்தப்பட்ட ஆலோசனையின் பேரில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்: அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 9 முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – ஆட்சியர் உத்தரவு!
தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3lCDYVA
via IFTTT
No comments:
Post a Comment