குஜராத்தில் நிலநடுக்கத்தினால் குலுங்கிய வீடுகள் – அதிர்ச்சியில் மக்கள்!
குஜராத் மாநிலத்தில் ஆகஸ்ட் 19ம் தேதி இரவு நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நிலநடுக்கம்:
நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வினால் ஏற்படுவதாகும். நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலினால் அளவிடப்படுகிறது. நிலநடுக்கம் ஜப்பானில் அதிக முறை உணரப்படுகிறது. இதனால் மக்கள் எப்போதும் உயிரை கையில்பிடித்துக் கொண்டு வாழும் நிலை உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தென் மாநிலங்களை விட வட மாநிலங்களிலேயே நிலநடுக்கம் அதிக முறை உணரப்பட்டிருக்கிறது. அதிலும், குஜராத் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் பதிவாகி வருகிறது. கடந்த மே மாதத்தில் கடைசியாக குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதியான நேற்று இரவு 7.13 மணி அளவில் ஜாம்நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
நிலநடுக்கத்தினால் வீடுகள்,கட்டிடங்கள் ஆடியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் தவர்க்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்களை மற்றும் பொருட்களுக்கு அதிக அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post குஜராத்தில் நிலநடுக்கத்தினால் குலுங்கிய வீடுகள் – அதிர்ச்சியில் மக்கள்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3gfwzYG
via IFTTT
No comments:
Post a Comment