தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 14, 2021

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கலில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்

தமிழக சட்டமன்ற பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தான் முதல் முறையாக வேளாண் துறைக்கென புதிய பட்ஜெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வேளாண் துறைக்கான திருத்தப்பட்ட புதிய நிதி நிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளோடு, இன்றும் (ஆகஸ்ட் 14) வேளாண் துறை சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

இது தொடர்பாக சட்டமன்ற உரையின் போது பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த புதிய வேளாண் அறிக்கை தமிழக விவசாயிகளிடம் கேட்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதனுடன் தமிழகத்தில் இனி பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது தமிழகத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் 30 மாவட்டங்களில் சுமார் 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனை மரக்கன்றுகள் அனைத்தும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும் எனவும் பனை மேம்பாட்டு இயக்கத்துக்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர அவசியமான காரணங்கள் நிமித்தமாக சாலையோரம் மற்றும் ஏரிப் பகுதிகளில் இருக்கும் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் – அரசு அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3yMEnbL
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture