இந்தியாவில் ஒரே நாளில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று – 585 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று பாதிப்பால் 585 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம் :
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,120 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,21,17,826 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 585 கொரோனா நோயாளிகள் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
செப். 1 முதல் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளது. கடந்த 5 மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இன்னும் முழுமையாக கொரோனா பரவல் குறையவில்லை. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,85,227 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறுபுறம் தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,295 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,13,02,345 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்துகிறது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post இந்தியாவில் ஒரே நாளில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று – 585 பேர் உயிரிழப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3m04ecw
via IFTTT
No comments:
Post a Comment