தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 09, 2021

இன்று முதல் சென்னையில் கடைகளை திறக்க அனுமதி – 2 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

இன்று முதல் சென்னையில் கடைகளை திறக்க அனுமதி – 2 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையடுத்து, தற்போது ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 முக்கிய இடங்களில் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலம் முழுவதும் கடந்த வாரங்களில் நோய் தொற்று பாதிப்பானது சற்றே உயர்ந்து வந்ததால், ஆகஸ்ட் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்!

அதன் படி சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு, புருக்லின் சாலை, ஜாம் பஜார் பாரதி சாலை, ரத்னா கபே சந்திப்பு, பெல்ஸ் சாலை சந்திப்பு, பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், தங்கசாலை சந்திப்பு பகுதிகளில் இயங்கி வந்த வணிக வளாகங்கள் ராயபுரம் மார்க்கெட் பகுதி, கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க், காமாட்சி அம்மன் கோவில், அமைந்தகரை மார்க்கெட் பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு, ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதி, ஆஞ்சநேயர் சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்களும் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று வணிக நிறுவனங்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடைகளை திறக்க வேண்டும் என வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்றுடன் (ஆகஸ்ட் 9) முடிவடையவுள்ள முழு ஊரடங்கானது ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட உள்ள பொது முடக்கத்தில் சென்னையில் உள்ள சில முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பேரலை தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை சென்னையின் முக்கிய 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதை கருத்தில் கொண்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 முக்கிய இடங்களில் கடைகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும் கடைகளுக்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கை சுத்திகரிப்பது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதனிடையே சேலம் மாவட்டத்தில் புதிய கொரோனா பரவல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீ பஜார், வீரபாண்டியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 9 முதல் கல்லூரிகள் திறப்பு – பேராசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!

இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர வார இறுதி நாட்களில் ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாட்களில் இப்பகுதிக்கு வரும் பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை மேட்டூர் அணை பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை பொருத்தளவு, பால் மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post இன்று முதல் சென்னையில் கடைகளை திறக்க அனுமதி – 2 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3CrRCAN
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture