ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலம் முழுவதும் பகல் நேரங்களில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை நீக்கிய பிறகு, ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது ஜூலை 18 வரை நீட்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க மேலும் 21 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர், மணிப்பூரில் புதிய பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பகல் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று அறிவித்தது.
கண்ணம்மா நள்ளிரவில் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – வெளியான ப்ரோமோ!
எனினும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தினசரி இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று மாநிலம் முழுவதுமான கொரோனா பரவல் பாதிப்புகளை ஆய்வு செய்த மணிப்பூர் அரசு, மத்திய அரசின் ஆலோசனைகளுக்கு ஏற்ப மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டல அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்தது.
இன்று முதல் சென்னையில் கடைகளை திறக்க அனுமதி – 2 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்!
இதை தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்து இது குறித்த மேலும் சில அறிவிப்புகளை பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மாநில செயற்குழு தலைவர் மற்றும் மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ்குமார் பிறப்பித்துள்ளார். இந்த பொது முடக்கத்தின் போது 20 பேர்கள் வரை கலந்து கொள்ளும் தவிர்க்க முடியாத திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகள் மற்றும் மத சடங்குகளை திறந்த வெளிகளில் நடத்திக் கொள்ளலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள புதிய நோயாளிகள் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் மருத்துவக் குழுக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 699 புதிய பாதிப்புகளுடன், 19 இறப்புகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3s20ZCo
via IFTTT
No comments:
Post a Comment