தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, April 29, 2023

உ.வே.சா | தமிழ்த் தாத்தா

 


*தமிழ்த் தாத்தா* 

*உ.வே.சா அவர்களின் நினைவேந்தல்.*

(கிபி1942 ஏப்ரல் 28)

✍️உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் மகன் சாமிநாதன் என்பதாகும்.

✍️இவரின் ஆசான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

✍️அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

✍️தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர்.

✍️சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளில் இருந்து நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து பாதுகாத்து அடுத்த தலைமுறை அறியும் வகையில் தந்தவர்.

✍️பல அரிய தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டி அவற்றை தொகுத்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பல சங்க நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவில் கொண்டுவர அரும்பாடுபட்டார்.

✍️உவேசா அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தும் விதமாக 2006 ல் நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.

✍️1942 ல் உவேசா பெயரில் சென்னையில் அமைக்கப்பட்ட நூலகம் இன்றும் செயல்படுகிறது.


No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture