தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Thursday, August 19, 2021

கண்ணனும் ஐஸ்வர்யாவும் முல்லை வீட்டில் இருப்பதை கேட்டு நிம்மதி அடையும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

கண்ணனும் ஐஸ்வர்யாவும் முல்லை வீட்டில் இருப்பதை கேட்டு நிம்மதி அடையும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் அழைத்து சாப்பாடு போடுகின்றனர். அப்போது பார்வதி கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் குத்தி காட்டுவது போல பேசுகிறார். கண்ணன் முல்லை வீட்டில் இருப்பதை கேட்டு தனம் மகிழ்ச்சி அடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு அழைத்து வந்ததை முல்லை அப்பா சொல்கிறார். அவனை சாப்பிட சொல்லுங்கள் என்று முல்லை சொல்ல, நீ சொல்ல வேண்டுமா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முல்லையின் அப்பா சொல்கிறார். இல்லை அம்மா எதுவும் நினைத்துக் கொண்டு சமைக்காம இருக்க போறாங்க என்று சொல்ல, அவளிடம் நீ சொல்லி தான் கூட்டிக் கொண்டு வந்தேன் என்று சொன்னதும் அவள் எதுவும் சொல்லவே இல்லை என்று சொல்கிறார்.

அதன் பின்னர் கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்து சாப்பிட சொல்கின்றனர். கண்ணன் சாப்பாட்டை பார்த்ததும் வேகமாக சாப்பிடுகிறார். நேற்று சாப்பிடவில்லையா இவ்வளவு வேகமாக சாப்பிடுகிறாய் என்று கேட்க, கண்ணன் சாப்பிடுவதை நிறுத்துகிறார். வீட்டில் 3 வேளை நல்ல சாப்பாடு, காலேஜ்க்கு காசு, வீட்டில் அனைவருக்கும் செல்லம் ஆனால் இருக்க முடியாமல் இப்படி செய்ய தோணுது என்று பார்வதி குத்தி காட்டி பேசுகிறார்.

லட்சுமி கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் குடும்பத்தினர், அஞ்சலியை நினைத்து சந்தோசப்படும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதன் பின்னர் ஐஸ்வர்யாவிடம் உன் பாட்டி இப்போ கஸ்தூரி வீட்டில் இல்லை தெரியுமா என்று சொல்கிறார். ஏன் என்னாச்சு என்று கேட்க, இவ்வளவு நடந்த பின்னாடி எப்படி அங்கே இருப்பாங்க, அவங்க தனியா இருக்க சொல்லி வீட்டிற்கு அனுப்பிட்டா என்று சொல்லவும் ஐஸ்வர்யா கண்ணனும் வருத்தப்பட்டு சாப்பிடாமல் இருக்கின்றனர். சாப்பிடுங்க என்று முருகன் சொல்ல கண்ணன் சாப்பிடுகிறார்.

மீனா தனம் முல்லை பேசிக் கொண்டிருக்க யாருமே சரியாக சாப்பிடவில்லை என்று தனத்தின் அம்மா சொல்கிறார். நான் சாப்பிட்டேன் அப்போ தான கயலுக்கு பால் கொடுக்க முடியும் என்று சொல்ல, உனக்காவது தோணுச்சே, இவளை பாரு வயிற்றில் புள்ளைய வைத்துக் கொண்டு இப்படி பண்ணுகிறார் என்று கூறுகிறார். முல்லை தனத்திடம் கண்ணனை நினைத்து கவலைப்படாதீங்க அவன் என் வீட்டில் தான் இருக்கான் என்று சொல்கிறார். இதை கேட்டு மீனாவும் தனமும் நிம்மதி அடைகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

நான் தான் என் அப்பாவிடம் சொல்லி கூட்டிக் கொண்டு போக சொன்னேன் என்று சொல்ல, பார்வதி எப்படி சம்மதித்தார் என்று தனத்தின் அம்மா சொல்கிறார். மீனா, நீங்க செய்தது ரொம்ப நல்ல விஷயம் என்று சொல்ல, தனத்தின் அம்மா மீனாவிடம் உன் அப்பாவும் நீ காதல் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போ எல்லாம் சரியா வந்துவிட்டது என்று சொல்கிறார். நான் ரோட்டில் நின்றால் இன்னும் என் அப்பா ஏற்றுக் கொள்ளாமல் தான் இருப்பார் என்று சொல்கிறார் மீனா.

தனம் கண்ணன் பாதுகாப்பாக இருப்பதை நினைத்து சந்தோசப்படுகிறார். மூர்த்தி, ஜீவா, முல்லை, தனம் எல்லாரும் கடையை பற்றி பேசிக் கொண்டிருக்க வா கண்ணா சாப்பிட என்று தனம் அழைக்கிறார். அதை கேட்டு அனைவரும் ஒரு மாதிரி நிற்கின்றனர். பின்னர் கதிர் முல்லையிடம் ரூமில் பேசிக் கொண்டிருக்க, கண்ணன் முல்லை வீட்டில் இருப்பதை சொல்கிறார். அதை கேட்டு கதிர் நிம்மதி அடைகிறார். ஆனால் இது சில நாள் மட்டும் தான் அதற்குள் மாமா அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என முல்லை சொல்கிறார்.

தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின் படியே அர்ச்சகர்கள் நியமனம் – அறநிலையத்துறை தகவல்!

பின்னர் ஜீவாவும் கதிரும் தூக்கம் வராமல் இருக்க, ஜீவாவிடம் கண்ணன் முல்லை வீட்டில் இருப்பதை கதிர் சொல்கிறார். அதை கேட்டு ஜீவா நிம்மதி அடைகிறார். பின்னர் லட்சுமி அம்மாவை பார்க்க செல்ல அவர் துக்கத்தில் கண்ணனை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். ஓடாதே கண்ணா நில்லு என்று புலம்புகிறார்.அதை பார்த்து ஜீவா கதிர் அங்கிருந்து கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post கண்ணனும் ஐஸ்வர்யாவும் முல்லை வீட்டில் இருப்பதை கேட்டு நிம்மதி அடையும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/2XyS1kR
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture