இன்றும், நாளையும் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 இடங்களில் இன்று மற்றும் நாளை (21.08.2021, 22.08.2021) ஆகிய இரு தினங்களும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் அடைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதனை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்டம் தோறும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இயங்கும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வருகிறது . அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, சென்னை, சேலம், கோவை ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ மனு!
அதனால் இம்மாவட்டங்களில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 23 முதல் துவக்கம்!
அதனை தொடர்ந்து தற்போது ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி சாலை, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.சாலை, மேட்டூர் சாலை, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி சாலை ஆகிய பகுதிகள் மற்றும் பவானி ஆகிய 24 பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் தொற்று விரைவாக பரவும் என்பதால் இந்த 24 இடங்களில் 21.08.2021, 22.08.2021 ஆகிய இரு தினங்களும் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி கடையை திறந்து விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post இன்றும், நாளையும் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3y7wEUi
via IFTTT
No comments:
Post a Comment