இந்தியாவில் ஒரே நாளில் 34,457 பேருக்கு கொரோனா தொற்று – 375 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 375 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் 34,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,93,286 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 57.61கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வைரஸ் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் புதிதாக இந்தியா முழுவதும் 375 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
செப். 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மொத்த பலி எண்ணிக்கை 4,33,964 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 36,347 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் விகிதம் 97.54% ஆக உள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,61,340 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதத்தை ஒப்பிடும் போது சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.12% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post இந்தியாவில் ஒரே நாளில் 34,457 பேருக்கு கொரோனா தொற்று – 375 பேர் உயிரிழப்பு! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3y6oOKX
via IFTTT
No comments:
Post a Comment