தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Sunday, August 22, 2021

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பம் – மத்திய அரசு அறிவிப்பு!

வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பயிர் காப்பீடு:

இந்தியாவில் வேளாண்மை வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அழிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான இயற்கைப் பேரழிவுகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், அடுத்த வேளாண்மைக் காலத்தில் அவர்களது கடன் தகுதியை உறுதி செய்யவும், இந்திய அரசு நாடு முழுவதும் பல வேளாண்மைத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும், காரிஃப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவிகிதம், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவிகிதம் என காப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு – வலிமை ரிலீஸ் விரைவில்!

மத்திய அரசு தமிழக வேளாண் துறை அறிவித்துள்ள பயிர்காப்பீடு திட்டத்தில் பல மாறுதல்களை செய்துள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் இந்த ஆண்டு காரீஃப் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்: தஞ்சாவூர், திருவாரூர், தேனீ, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்கள்.

மக்காசோளம் பயிருக்கு தேனி, திண்டுக்கல், அரியலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, விழுப்புரம்

துவரம் பருப்பு: அரியலூர், தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை

TN Job “FB  Group” Join Now

உளுந்தம் பருப்பு: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், திருவள்ளூர், கோவை

பச்சை பருப்பு: சேலம், நாமக்கல், தருமபுரி, திருவள்ளூர், கோவை

நிலக்கடலை: சேலம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தேனி

சோளம்: அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, தேனி, திருநெல்வேலி

கம்பு: தேனி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர்

பருத்தி: சேலம், தூத்துக்குடி

கேழ்வரகு: தருமபுரி

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பம் – மத்திய அரசு அறிவிப்பு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/382T3HY
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture