தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Friday, August 20, 2021

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு நிறைவு – ஆகஸ்ட் 28க்குள் மதிப்பீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு நிறைவு – ஆகஸ்ட் 28க்குள் மதிப்பீடு!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை இறுதித் தேர்வுகள் இன்றி மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட துணைத் தேர்வுக்கான விடைத்தாளை 28ம் தேதிக்குள் திருத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு:

முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கொரோனா உருமாறி பரவியது. இத்தகைய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

புதிய நிதியாண்டில் சுமார் 300 பேருக்கு வேலைவாய்ப்பு – OYO அறிவிப்பு!

தேர்வு நடத்தப்படாமல் மாணவர்களுக்கு வழங்கிய மதிப்பெண்களின் சிலர் அதிருப்தி அடைந்திருந்தனர். இதனால் விருப்பமுள்ள மாணவர்கள் துணைத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இதில் பெறப்படும் மதிப்பெண்ணே இறுதியானது என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் துணைத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் 36 ஆயிரம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு – விரைவு தரிசன டிக்கெட் ஒத்திவைப்பு!

அதன் அடிப்படையில் கடந்த 6ம் தேதி தொடங்கிய துணைத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் விடைத்தாள்கள் திருத்தும் பணியை துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு நிறைவு – ஆகஸ்ட் 28க்குள் மதிப்பீடு! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3iYUVrA
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture