தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, July 27, 2019

ப.இராஜ ரெத்தினம் கவிதை

Join கண்ணாடி WhatsApp group
_________
கடலின்
கீதம்
கலாம்
_________

பாரதத்தின்
முதல்
மகனே

தமிழகத்தின்
தலை
மகனே

ஏழை
பெற்றோரின்
புதல்வனே

இளைஞர்கள்
ஏந்தும்
முதல்வனே

தண்ணியில்லா
காட்டில்
உன்
பிறப்பு

தரணியை
கண்ணீரில்
தள்ளியது
உன்
இறப்பு

உன்னால்
தானே
குடியாக
மாளிகைக்கே
சிறப்பு

இதற்கு
யாரும்,
சொல்வாரோ
மறுப்பு

மழலைகளிடம்
நீ காட்டினாய்
பாசம்

மாற்று
திறனாளிகளிடம்
உனக்கு
உண்டு
நேசம்

உன்
புகழை
வரலாறு
இனி
பேசும்

உன்னை
மறக்குமா
இனி
இந்த
தேசம்

______________________
ப .இராஜ ரெத்தினம்
______________________

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture